Ticker

6/recent/ticker-posts

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அதிய ஹாசன் அம்மன்

     பெங்களூருக்கு மேற்கே சுமார் 180கி.மீ. தூரத்தில்  ஹாசன் மாவட்டத்தில் அருள்கடாச்சமாய் காட்சிதருகிறாள் "ஹாசனம்மா"

    ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தருகிறாள் அன்னை ஹாசனம்மாள்.  கோபுர தரிசனத்திற்கு பிறகு கருவரையில் நுழையும் போது தெண்படும் மூன்று சின்ன சின்ன கற்களாய் சுயம்பு வடிவத்தில் அம்மனை தரிசிக்கலாம். ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதாவது தீபாவளி காலத்தில் கோவில் நடை திறக்கப்படுகிறது. சுற்றிலும் மலர்களால் அலங்கறிக்கப்பட்டு பக்திமயமாய் காட்சியளிக்கிறது ஹாசனம்மன் கோவில். 



   மிகுந்த சக்தி வாய்ந்த அம்மனாக ஹசனம்மாவை குறிப்பிடுகிறார்கள். மிகவும் அதிசயமான வகையில் அம்மனாய் வீற்றிருக்கும் மூன்று சுயம்பு வடிவ கற்களின் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்படும். ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. 


    அது மட்டுமா? இன்னும் நிறைய அதிசயங்கள் இருக்கிறது. முதலில் சொன்னது போல் ஸ்வாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே ஸ்வாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் எப்படி சுட சுட கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. அவ்வளவு தானா என்றால் இல்லை. மேலும் ஒரு அதிசயம் நடை பெருகிறது. ஸ்வாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள். ஆமாம் அதிசயம் தான் ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு. அபிஷேகம் செய்து முடித்து வெரும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று ஸ்வாமிகள் {கற்கள்} மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.

   ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு சொல்லுங்கள் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று?

இந்த தீபாவளி விடுமுறையில் சென்றுவர ஒரு அற்புதமான ஸ்தளம் ஹசனம்மா திருக்கோவில்.

Post a Comment

0 Comments